ஆட்டையாம்பட்டி, நவ.8: ஆட்டையாம்பட்டி அருகே காளிப்பட்டி செங்குந்தர் மாரியம்மன் கோயிலில், ஐப்பசி மாத திருவிழா கடந்த 15நாட்களுக்கு முன் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி மாரியம்மனுக்கு பலவித அபிஷேகம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் அக்னிகரகம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலைமை பூசாரி முதலில் அக்னிகுண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.