பொள்ளாச்சி, அக்.12: கழிவுநீர் தேங்குவதை தடுக்க கோரி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, அதனை சுற்றியுள்ள பல இடங்களில் இருந்து வரும் கழிவுநீர் மகாலட்சுமி நகர் பகுதயை சூழ்ந்து கொள்வதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நேற்று, மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திடீர் என பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் அவர்கள் பேரூராட்சி அலுவலர்களிடம், எங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதுடன்,