கோவை, அக்.12: கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த மஞ்சள் ஏலத்திற்கு வரத்து இல்லாததால் ரத்து செய்யப்பட்டது.
கோவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் திங்கள் மற்றும் வியாழன் தோறும் மஞ்சள் விற்பனை, ஏலம் முறையில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை மஞ்சள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் வந்திருந்தனர். ஆனால், மஞ்சள் வரத்து போதிய அளவு இல்லாததால், விற்பனை ரத்து செய்யப்பட்டது. இதே போல் கடந்த வாரங்களாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.