சிவகங்கை, அக். 12: சிவகங்கையில் அரசு போக்குவரத்துக் கழகம் காரைக்குடி மண்டலம், சிவகங்கை போக்குவரத்துக் கழக பணிமனையின் மூலம் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பேருந்துகள் தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சிவகங்கை எம்.பி செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.