சோழவந்தான், அக். 10: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி இரண்டும் ஒரே வளாகத்தில் செயல்படுகிறது. கள்ளர் பள்ளியில் 85 பேரும், ஊராட்சி பள்ளியில் 38 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். இவ்வளாகத்தில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள ஒட்டு கட்டடத்தை சேர்த்து 6 வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. ஆங்கில வழி எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி பயிலும் சிறுவர் சிறுமியருக்கான வகுப்பறை வளாகத்தின் கடைசியில் அமைந்துள்ளது.