கல்குவாரிகளை அகற்ற கோரி பேய்க்குளத்தில் பாஜ ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம், செப். 26:  சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் 1 கிராம பகுதியில் குளத்துக்கான வரத்துவாரி பகுதியில் நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் உள்ள 5 குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி பேய்க்குளம் பஜாரில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஓபிசி அணி செயலாளர் முத்துக்குட்டி தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய பார்வையாளர் நடராஜன், ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் திலக்சந்திரன், விவசாய அணி ஒன்றியத் தலைவர் நாராயணண் முன்னிலை வகித்தனர்நிகழ்ச்சியில்  மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் தாஸ், ஸ்ரீவைகுண்டம் நகரத் தலைவர் காசிராஜன்,ஒன்றிய துணைத்தலைவர் முண்டசாமி, நெசவாளர் பிரிவு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர்கள் பொன்பாண்டி, சந்தனமுத்து, ஒன்றிய வர்த்தக பிரிவு தலைவர் குமரேசன் பேசினர்.

 இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் விக்ேனஷ்குமாரி, ராஜாரமணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூல்பாண்டியன்,உடன்குடி ஒன்றிய பொதுச் செயலாளர்கள் அழகேசன், சிவந்திவேல், உள்ளாட்சி பிரிவு ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன், சாமிநாதன், காளியப்பன், கோயில்பிள்ளை உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: