கோவில்பட்டி, செப். 26: கோவில்பட்டியில் மின்பஸ் டிரைவர் உள்ளிட்ட 2 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி தாமஸ்நகரை சேர்ந்த நயினார் மகன் பொன்ராஜ் (37). மினிபஸ் டிரைவர். இவரது மனைவி மீராராணி (35). தம்பதிக்கு அகலியா (15), ஜெயபிரதா (10) என இரு மகள்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கியபோது மின்விசிறியில் தூக்கிட்டு பொன்ராஜ் தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு சம்பவம்: இதே போல் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (70). தனியார் ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 5 மகள்கள், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் சங்கரலிங்கபுரம் அருகே வயல்வெளியில் உள்ள மின்வாரிய கோபுரத்தில் சோமசுந்தரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.