காணாமல் போன சுவாமி சிலையை மீட்க வேண்டும்

சிவகங்கை, செப்.25:  கல்லல் அருகே கீழக்கோட்டை கோவிலில் காணாமல் போன கோவில் சிலையை கண்டு பிடிக்கக்கோரி கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. கீழக்கோட்டை ராஜேந்திர சோழன் அளித்துள்ள மனுவில், கீழக்கோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதினமிளகி அய்யனார் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சுமார் 200 ஆண்டு பழமை வாய்ந்த கற்சிலை காணாமல் போனது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. சிலை காணாமல் போனது குறித்து யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இக்கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: