பெண்ணை தாக்கிய தம்பதி கைது குழாயில் தண்ணீர் பிடித்த தகராறில்

பேரணாம்பட்டு, செப்.19: பேரணாம்பட்டு அடுத்த ஏரிக்குத்தி புதுமனை பகுதியை சேர்ந்தவர் பாரதி(28), இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் எதிரே உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தார். தண்ணீர் பிடித்தபிறகு தெருக்குழாய் சரியாக மூடாமல் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு தண்ணீர் பிடிக்க வந்த ராஜி மனைவி சுதா(24), ‘ குழாயை ஏன் சரியாக மூடாமல் செல்கிறாய்’ என பாரதியை தட்டிக்கேட்டார். இதில் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுதா மற்றும் சுதாவின் கணவர் ராஜி ஆகியோர், பாரதியை கைகளால் சரமாரியாக தாக்கினார்களாம்.

இதில் படுகாயம் அடைந்த பாரதி பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாரதி கொடுத்த புகாரின்பேரில் பேரணாம்பட்டு எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து சுதா, ராஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: