பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி, செப்.19: தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் விருதுநகரில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் மணிமேகலை(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டனை, மணிமேகலை வற்புறுத்தியுள்ளார். அதற்கு மணிகண்டன் மறுத்துவிட்டு, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிமேகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ ஜென்சி மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: