தூத்துக்குடி, செப்.19: தூத்துக்குடி தென்பாகம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் (53) என்பதும் அவர் அந்த பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.