வாணியம்பாடி, செப்.12: வாணியம்பாடி நகரில் நியூ டவுன் ரயில்வே கேட் மூடி ஓராண்டாகியும் பாலம் கட்டாததை கண்டித்து பொதுமக்கள் நினைவு தினம் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி நகரின் நடுப்பகுதியில் உள்ளது நியூ டவுன் ரயில்வே கேட். வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் மற்றொருபுறம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் கல்லூரிகள் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள், பொதுமக்கள், மாணவர்கள் சென்று வருகின்றனர்.இந்த ரயில்ேவ கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த 11.9.2017 அன்று இந்த கேட் மூடப்பட்டு பாலம் கட்டுமானப்பணிகளுக்காக ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நிறுத்தப்பட்டது.