நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்ப்பார் என தகவல்

மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்றப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐபிஎல் 16வது சீசன் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அகமதாபாத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் மற்றும் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்றப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 2021வது ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். அந்த சீசனில் சிறப்பாக செயல்படாமல் இதையடுத்து நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்மித்-ஐ எந்த அணியும் வாங்கவில்லை.

பின்னர் ஐபிஎல்-ன் 16 வது சீசனுக்கான மினி ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித் தனது பெயரை வீரர்கள் பட்டியலில் பதிவுசெய்யவில்லை. இதனால் ஸ்மித் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் மீண்டும் ஐபிஎல் 2023ல் பங்கேற்க போவதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்த்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் நடப்பு ஐபிஎல் வர்ணனையாளராக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: