இரட்டை சதம் விளாசிய 100வது போட்டியுடன், டெஸ்ட்டில் இருந்து வார்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: ரிக்கிபாண்டிங் கருத்து

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரின் டெஸ்ட்கிரிக்கெட் எதிர்காலம் குறித்து  முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியிருப்பதாவது: வார்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்நாட்டில் மெல்போர்ன் மைதானத்தில் தனது நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடினார். மேலும் அந்தப் போட்டியில் 200 ரன் எடுத்து அசத்தினார். அவர் ஓய்வு பெறுவதற்கு அந்தப் போட்டி மிகச் சிறந்ததாக இருந்தது.

அவர் ஓய்வு பெறுவதற்கு சிறந்த நேரம் அதுவென்று நான் கருதினேன். உள்நாட்டில் சொந்த மக்களின் முன்னால் இப்படி ஒரு அற்புதமான நிலையில் ஓய்வு பெறுவது எல்லோருக்கும் அமையாது. ஆனால் மீண்டும் இந்த வாய்ப்பு வார்னருக்கு கிடைக்காது என்று நம்மால் யார் சொல்ல முடியும்?. ஆனால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது. அவர் ஓய்வு முடிவை தென் ஆப்பிரிக்கா போட்டியின் போது அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories: