குவாலியர்: மத்திய பிரதேச அணியுடனான இரானி கோப்பை போட்டியில், இதர இந்திய அணி 238 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இதர இந்தியா முதல் இன்னிங்சில் 484 ரன் குவித்தது. ஈஸ்வரன் 154, ஜெய்ஸ்வால் 213, யஷ் துல் 55 ரன் விளாசினர். மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 294 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. யஷ் துபே 109, ஹர்ஷ் காவ்லி 54, சரன்ஷ் ஜெயின் 66 ரன் எடுத்தனர். இதையடுத்து, 190 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இதர இந்தியா 246 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஜெய்ஸ்வால் 144 ரன் விளாசினார். இதைத் தொடர்ந்து, 437 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ம.பி. அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்திருந்தது.