ரூ.6 கோடிக்கு பங்களா வாங்கிய கோஹ்லி-அனுஷ்கா

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா தம்பதியினர், மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியான அலிபாக் நகர் அருகே ஆவாஸ் கிராமத்தில் ரூ.6 கோடிக்கு புதிதாக பங்களா வாங்கி உள்ளனர். 2,000 சதுர அடியில் கொண்ட வீட்டில் 400 சதுர அடியில் நீச்சல் குளம் உள்ளது. வீடு வாங்கியதற்காக முத்திரை கட்டணமாக ரூ.36 லட்சம் செலுத்தி உள்ளனர்.

ஏற்கனவே கோஹ்லி அலிபாக்கில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.19.24 கோடிக்கு ஒரு பண்ணை வீட்டை வாங்கினார். இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மாவும், அலிபாக் அருகே மத்ரோலி கிராமத்தில் 2021ல் நான்கு ஏக்கர் நிலத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. அலிபாக்கில் தற்போது நிலத்தின் சராசரி விலை ஒரு சதுர அடிக்கு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை உள்ளது. மேலும் இது உயர் வகுப்பினருக்கு விருப்பமான வார இறுதி நாட்களை உற்சாகத்துடன் கழிக்கும் இடமாகவும் உள்ளது.

Related Stories: