சென்னை: ஏடிபி சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் காதே - ஜே கிளார்க் (பிரிட்டன்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா) - நினோ செர்டாருசிச் (குரோஷியா) ஜோடியுடன் நேற்று மோதிய அர்ஜுன் - கிளார்க் ஜோடி அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை மிக எளிதாகக் கைப்பற்றியது. 2வது செட்டில் செபாஸ்டியன் - நினோ கடுமையாகப் போராடினாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன் - கிளார்க் இணை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.