புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 2வது டெஸ்ட் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் நாளான நேற்று 4 விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆட்டம் முடிந்த பின்னர் கூறியதாவது: இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகம்தான்.
