கெபெர்ஹா: 10 அணிகள் பங்கேற்றுள்ள 8வது ஐசிசி மகளிர் டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நேற்றிரவு நடந்த 8வது லீக் போட்டியில் குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 57 (50 பந்து), ஷோர்னா அக்டர் 12 ரன் எடுத்தனர்.