பெங்களூரு:இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா அங்கு செல்லாது எனவும், அந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படும் எனவும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டட் தலையிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா ஏன் இவ்வளவு பயப்படுகிறது? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என்பது பிசிசிஐக்கு தெரியும்.