முதல்வரின் தனிச்செயலாளர்களுக்கு கூடுதல் துறை ஒதுக்கீடு

சென்னை: முதல்வரின் தனி செயலாளர்களுக்கு கூடுதல் துறையில் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் உதயச்சத்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோருக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு, உதயச்சத்திரனுக்கு சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் சுற்றுலா ஆகிய துறையில் கூடுதலாக வழங்கப்பட்டன. முதல்வரின் 4ஆம் தனிச்செயலாளர் வழங்கப்பட்டிருந்த 12 துறைகளை பிரித்து வழங்க உத்தரவு அளிக்கப்பட்டது

Related Stories: