புவனேஸ்வர்: 15வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் 2-0 என ஸ்பெயினை வீழ்த்தியது. 2வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல்கள் இன்றி டிரா செய்தது. இந்நிலையில்,கடைசி லீக் போட்டியில் நாளை இரவு 7 மணிக்கு புவனேஸ்வரில் வேல்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த பிரிவில் தற்போது இங்கிலாந்து, இந்தியா தலா ஒரு வெற்றி,ஒரு டிரா என 4 புள்ளிகள் பெற்றுள்ளன.