கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை தடுக்க தவறியதற்காக முன்னாள் அதிபர் சிறிசேனாவுக்கு ரூ.2.23 கோடி அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21ம் தேதி பல்வேறு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. 8 இடங்களில் நடந்த தாக்குதலில் 277 பேர் பலியானார்கள். இதுகுறித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக உளவுத்துறை எச்சரித்தும், குண்டுவெடிப்பை தடுக்கத்தவறிய அப்போதைய அதிபர் மைத்திரி பால சிறிசேனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதை இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெயந்த் ஜெயசூர்யா தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.