ராயகடா: ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விளாடிமிர், பவல் கீதம் உட்பட நான்கு பேர் வந்தனர். அவர்கள் சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ராயகடா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓட்டல் அறையில் விளாடிமிர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலாப் பயணியான பவல் கீதம், ஓட்டலின் பால்கனியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.