சென்னை: சென்னை மாநகராட்சியின் 165வது வார்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை மாநகராட்சியின் 165-ஆவது வார்டு கவுன்சிலரும், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.