துரின்: ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. பைனல்ஸ் எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் தரவரிசையில் டாப் 8 இடம் வகிக்கும் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட்ராபின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.