பாக். முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்- சானியா மிர்சா விவாகரத்து

ஐதராபாத்: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டதாக நெருங்கிய உறவினர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சானியா மிர்சா தாய் ஆனார். அவருக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற 4 வயது மகன் உள்ளான். திருமணம் செய்த பின்னர் பாகிஸ்தானில் உள்ள மாமியார் வீட்டிற்கு செல்லாத சானியா மிர்சா, கணவருடன் துபாயில் சில காலம் வசித்து வந்தார். தற்போது ஐதராபாத்தில் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சமீப காலமாக சானியா மிர்சா கணவரை பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் சானியா மிர்சாவின் கடந்த சில நாட்களுக்கு முந்தைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவுகள் இருந்தன. அதில் கடினமான நாட்களைக் கடந்து செல்லும் தருணங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து சோயிப் மாலிக், சானியா மிர்சாவிற்கு துரோகம் செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சோயிப் மாலிக் டிவி நிகழ்ச்சி நடத்தும்போது அதில் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சானியா மிர்சாவிற்கு துரோகம் செய்ததாக பாகிஸ்தான் மீடியாக்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சானியா மிர்சாவின் சில பதிவுகள் இருவருக்கும் இடையே பிரிவு இருப்பதை உறுதி செய்யும் விதமாகவே அமைந்துள்ளன.

`உடைந்த இதயங்கள் எங்குச் செல்கின்றன. அல்லாவைக் காண’ என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து கொண்டதாக இருவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் உறுதிபடுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டனர். இதற்கு மேல் என்னால் எதுவும் வெளியிட முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும், என தெரிவித்துள்ளார். திருமணமான 12 ஆண்டில் சானியா மிர்சா விவாகரத்து செய்துள்ள நிலையில் அதுபற்றி அவர் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Stories: