தென் கொரியா நாட்டில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு

தென்கொரியா: தென் கொரியா நாட்டில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீய ஆவிகள், துரசக்திகள் இடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்வதற்காக பேய்களை போலவும், ஆவிகளை போலவும் பயமுறுத்துவது போல முகமூடி அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டு செல்வதும் ஹாலோவின் திருவிழா ஆகும். மேற்கத்திய நாடுகளில் உள்ள பிரபலமான உள்ள ஹாலோவின் திருவிழா தென் கொரியா நகரில் சியோலின் பகுதியில் கொண்டாடபட்டது.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு முதல்முறையாக முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்லாது வெளிபுறத்தில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதில் சுமார் 1 லட்சம் கலந்து கொண்டனர்.ஆயிரக்கணக்காவர்கள் ஒரே நேரத்தில் குறுகிய தெருக்களில் திரண்டர். அப்போது ஏற்ட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் கதறுவதை சமூக வளைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 400 பேர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், 140 வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது. நெரிசலில் சிக்கிய பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் இதுவரை 151 பேர் உயிரிழந்துவிட்டனர். 100க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துயர சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு தென் கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: