கான்பூர்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்ரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு டி.20 கிரிக்கெட் தொடர் கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் முன்னாள் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ், ஜான்டி ரோட்ஸ் தலைமையிலான தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், நமன் ஓஜா 21 (18பந்து), சச்சின் டெண்டுல்கர் 16 (15பந்து) ரன்னில் வெளியேற ரெய்னா 22 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33, ஸ்டூவர்ட் பின்னி நாட்அவுட்டாக 82 (42பந்து,5பவுண்டரி,6சிக்சர்), யூசுப் பதான் 15 பந்துகளில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 35 ரன் அடித்தனர். யுவராஜ் சிங் 6ரன்னில் அவுட் ஆனார். 20 ஓவரில் இந்தியா 4விக்கெட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.