சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் கார்சியா, சபலென்கா

சின்சினாட்டி: அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த கால் இறுதி போட்டியில், 6ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 24 வயதான அரினா சபலென்கா, சீனாவின் 33வயது ஜாங் ஷுவாயுடன் மோதினார். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் சபலென்கா வெற்றி பெற்றார்.

மற்றொரு கால்இறுதியில் பிரான்சின் 28 வயது கரோலின் கார்சியா, 6-1, 7-5 என்ற செட் கணக்கில், 7ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் 27 வயது மேடிசன் கீஸ், 6-2, 6-4 என கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவையும், செக்குடியரசின் 32 வயது பெட்ரா கிவிட்டோவா, 6-2, 6-3 என ஆஸ்திரேலியாவின் அஜ்லாவையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் மேடிசன் கீஸ்-கிவிட்டோவா, சபலென்கா-கார்சியா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் கால்இறுதியில் குரோஷியாவின் போர்னா கோரிக், கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸ், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் மோதுகின்றனர். மகளிர் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, லூசி ஹர்டேக்கா ஜோடி கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது.

Related Stories: