சென்னை நீதிமன்றத்தை இழிவு படுத்திய விவகாரம்!: பாஜக -வை சேர்ந்த எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!! Jun 17, 2021 பாஜக சென்னை பாஜ்கா திரிமம் நீதி மன்றம் தின மலர் சென்னை: உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய பாஜக -வை சேர்ந்த எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை திருமயம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜா மீதான குற்றப்பத்திரிகை நகலை மதுரைக் கிளையில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டது. அச்சமயம் விநாயகர் சதுர்த்தி மேடை அமைத்து பேச காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்த பாஜக -வை சேர்ந்த எச்.ராஜா போலீசை அவமதித்ததுடன் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. எச்.ராஜாவின் அவதூறு பேச்சு பற்றி திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. எச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி திமுக வழக்கறிஞர் துரைசாமி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது துரைசாமி மனுவை விசாரித்த நீதிமன்றம் எச்.ராஜா மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. … The post நீதிமன்றத்தை இழிவு படுத்திய விவகாரம்!: பாஜக -வை சேர்ந்த எச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!! appeared first on Dinakaran.
துணைப்பதிவாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் பொதுமக்களுக்கு விரைந்து சேவைகள் வழங்க முடியும்: அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்; அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: பார்முலா 4 கார் ரேஸ் நடத்த செலவு செய்த பணத்தை தமிழக அரசிடம் கேட்க தீர்மானம்
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட வேண்டும்: பேரவையில் எஸ்.ஆர்.ராஜா கோரிக்கை
ஏலகிரிக்கு சுற்றுலா சென்றபோது கார் டயர் வெடித்ததால் லாரி மீது மோதி சென்னை கல்லூரி மாணவி பரிதாப பலி: 3 மாணவர்கள் படுகாயம்
வழித்தட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் மெட்ரோ ரயில்களில் டைனமிக் ரூட் மேப்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு திட்டங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை