மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் காலிறுதியில் பிரணாய், சிந்து

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டியின் காலிறுதியில் விளையாட இந்தியாவின் பிரணாய், சிந்து ஆகியோர் முன்னேறி உள்ளனர். கோலாம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. ஆடவர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய 2வதுசுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் நேற்று சீன தைபே வீரர் சூ வெய் வாங் உடன் மோதினார். அதில் பிரணாய் 44 நிமிடங்களில் 21-19, 21-16 என நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜப்பான் வீரர் கன்டா சுனேயமா உடன்  இன்று  களம்  காணுகிறார். அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் சாய் பிரனீத், பாருபள்ளி காஷ்யப் ஆகியோர் நேற்ற 2வது சுற்றில் தோற்று வெளியேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து நேற்று சீனாவின் ஜாங் யீ மான் உடன் விளையாடினார். அதில் சிந்து வெறும் 28 நிமிடங்களில் 21-12, 21-10 என நேர் செட்களில் எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் உடன்  இன்று மோத உள்ளார்.

Related Stories: