கேளம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது: 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே கஞ்சா விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், எஸ்.ஐ. தமிழன்பன் ஆகியோர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் பொட்டலங்களாக கட்டி கஞ்சா விற்பனை நடைபெற்று வருவது தெரிய வந்தது. இதையடுத்த போலீசார் அங்கிருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர்.

இருவரும் ஒடிசா மாநிலம் விகாரம்பூர் பகுதியைச் சேர்ந்த சசி பரீடா (50), கஞ்சம் மாவட்டத்தைச் சோந்்த அமர் பரீடா (39) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: