அவரது உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உடனடியாக ஆசிரியர் மாரிமுத்துவை தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து விடுவித்தனர். மாணவியின் பாலியல் புகார் தொடர்பாக சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தேர்வெழுதிக்கொண்டிருந்த மாணவிக்கு ஆசிரியர் மாரிமுத்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) சைமன்ராஜ், சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார், அரசு பள்ளி ஆசிரியர் மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பிளஸ்-1 தேர்வு எழுதியபோது தேர்வறையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர்: போக்சோ சட்டத்தில் வழக்கு appeared first on Dinakaran.