இதுகுறித்து பிரபாகர், காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில் காட்பாடி அடுத்த தண்டலம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வேலூர் மாவட்ட பாஜ சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ராஜேஷ்(28), பாஜ மாவட்ட இளைஞரணி செயலாளர் நவீன்குமார்(27) ஆகியோர், ஆட்டோ டிரைவர் பிரபாகரை வழிமறித்து பணம் பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளிகொண்டாவில் வேலூர் மாவட்ட பாஜ இளைஞரணி தலைவர் கிளி (எ) சதீஷ் என்பவர், நேற்றுமுன்தினம் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜ நிர்வாகிகளான ராஜேஷ், நவீன்குமார் ஆகியோர் காட்பாடி அருகே வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி பாஜ இளைஞரணி செயலாளர், ஊடக பொறுப்பாளர் கைது appeared first on Dinakaran.