திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கீழையப்பட்டியில், விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே நாச்சியாபுரம் கீழையப்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 200க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.