திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியின் உளவியல் துறை சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் சாய் சத்யவதி முன்னிலை வகித்தார்.

முதல்வர் மாலதி செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார்.போதைப் பொருளால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி மாணவர்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. போதைப் பொருள் இல்லாத வளாக கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.

 

The post திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: