மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில் நுவா டைமண்ட்ஸ் கலெக்சன்: கரீனா கபூர் கான் வெளியிட்டார்

சென்னை: மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், யுஏஇ-ல் நடந்த ஒரு பிரமாண்டமான நிகழ்வில் ‘நுவா’ என்ற பெயரில் அதன் சமீபத்திய வைர நகை சேகரிப்பை வெளியிட்டது. பிரபல இந்திய நடிகை கரீனா கபூர் கான் இந்த நகைகளின் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த நகை சேகரிப்புகள் இந்தியாவில் உள்ள அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.நுவா நகை சேகரிப்பு என்பது இயற்கையின் சிக்கலான வடிவமைப்புகள், அலைகள், வடிவங்கள், மடிப்புகள் மற்றும் அமைப்புகளின் கொண்டாட்டமாகும்.

இது ஆடம்பரமான வைர நகைகளாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை உலகில் காணப்படும் நேர்த்தி மற்றும் மீள்தன்மை ஆகியவற்றிலிருந்து தூண்டுதலைப் பெற்று, நகை சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் உன்னிப்பாக வடிவமைக்கப்பட்டு, காலப்போக்கில் செம்மைப்படுத்தப்பட்டு, ஏற்ற தாழ்வுகளில் பயணிக்கும், தங்கள் கனவுகளில் உறுதியுடன் நிற்கும் பெண்களைப் போலவே, ஒரு புகழ்பெற்ற, சிக்கலான கலைப் படைப்பாக வெளிப்படும்.

ஒவ்வொரு நகையும் பெண்களின் நேர்த்திக்கும், வலிமைக்கும், கருணைக்கும் சான்றாகும்.இதுகுறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், இயற்கை மற்றும் பெண்களின் மனம் தளராத மனப்பான்மை இரண்டையும் கொண்டாடும் நுவா தொகுப்பை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பகுதியும் இயற்கையின் சிக்கலான அழகையும், பெண்களின் நெகிழ்ச்சியையும் பிரதிபலிக்கிற விதத்தில் மிகுந்த கவனத்துடனும் துல்லியத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில் உள்ள அனைத்து வைர நகைகளைப் போலவே, மலபார் வாக்குறுதிகளான பொறுப்புடன் பெறப்பட்ட இயற்கை வைரங்கள், பரிசோதிக்கப்பட்டு மற்றும் சான்றளிக்கப்பட்ட வைரங்கள், 100% எக்சேஞ்ச் மதிப்பு, இயற்கையாக பெறப்பட்ட வைரங்கள், 100% வெளிப்படைத்தன்மை, உத்திரவாதத்துடன் அமைந்துள்ளது,’’ என்றார்.

The post மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில் நுவா டைமண்ட்ஸ் கலெக்சன்: கரீனா கபூர் கான் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: