மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 28வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில், 4 ஓவரில் 28 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஐபிஎல்லில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய 4வது வீரர் என்ற சிறப்பு பெற்றார். அவர் கூறியதாவது: நான் யார்க்கரையும், பேட்ஸ்மேன்கள் உடலை நோக்கியும் பந்துவீச முயற்சித்தேன்.