திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கத்தில் உள்ள ஓம்ஸ்ரீ தாய் நாகாத்தம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 17ம் ஆண்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை பக்தர்கள் 1008 பால் குடம் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதன்பிறகு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் உடலில் ஊக்கு அணிந்தவாறு கிரேன் மூலமாக பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர். பகல் 12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது.