டெல்லி: அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து 13 இந்திய சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்திய கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் ஆகியவை தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் இந்திய கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவில் உள்ள ஏல் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கக்கூடிய அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து இன்று சுமார் 13 இந்திய சிலைகள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்டவை என தகவல் வெளியாகியிருக்கிறது.