உலக கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல் அணி தகுதி

போர்டோ: 32 அணிகள் பங்கேற்கும் 22வது பிபா உலக கோப்பை கால்பந்து இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெற உள்ளது. இதற்காக தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போர்ச்சுக்கல் நாட்டின் போர்டோ நகரில் நடந்தபோட்டியில், போர்ச்சுக்கல் -வடக்கு மாசிடோனியா அணிகள் மோதின.

கடந்த வாரம்  நடந்த போட்டியில் இத்தாலியை வீழ்த்தி உலக கோப்பையில் இருந்து அந்த அணியை வடக்கு மாசிடோனியா வெளியேற்றியதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் போர்ச்சுக்கல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணியின் புருனோ பெர்னாண்டஸ் 32 மற்றும் 65வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் உலக கோப்பைக்கு போர்ச்சுக்கல் தகுதி பெற்றது.

Related Stories: