ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று கவர்னர் மகள் திருமணம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஊட்டி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் இளைய மகள் திருமண விழா ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் இன்று நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ளும் உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேற்றே ஊட்டி வந்தனர். இவர்கள் தங்குவதற்கு ராஜ்பவன் மாளிகை தவிர, மூன்று நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மெகந்தி திருமணம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருமண விழாவையொட்டி ராஜ்பவன் மாளிகை முழுவதும் வர்ணம் பூசப்பட்டு, அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது. ராஜ்பவன் மாளிகையில் தென்னை ஓலைகள் கொண்டு அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் பகுதியில் வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

ராஜ்பவன் மாளிகை செல்லும் இரு வழித்தடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்பவர்கள் தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் போலீசாரின் விசாரணைக்கு பின்னரே ராஜ்பவன் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இன்று நடக்கும் திருமண விழாவில் விவிஐபிக்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: