தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் அனுமதியின்றி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்யப்படுவதாக புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகர் ரயில் நிலைய பாதுகாப்பு படை போலீசாருக்கு, புதுடெல்லியில் உள்ள ஐஆர்சிடிசி அலுவலகத்தில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி புதுவண்ணாரப்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி எஸ்ஐக்கள் சசி புஷன்குமார், ராஜசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின்பேரில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மெயின் தெருவை சேர்ந்த சக்திவேல்(30) என்பவரை பிடித்து விசாரணை விசாரித்தனர்.