மேலூர்: மேலூர் அருகே மழையால் கண்மாய் நீர் நிரம்பி, அருகில் உள்ள அரசு பள்ளிக்குள் பாய்ந்ததால், பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலூர் அருகில் உள்ள கொடுக்கப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள கண்மாய், தொடர் மழையால் நிரம்பி வெளியேற துவங்கியது. இத்தண்ணீர் அருகில் உள்ள இப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்தது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குள் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.