சென்னை: தவெக தலைமை வெளியிட்ட அறிக்கை: தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 1 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் அறவே பின்தொடரக் கூடாது. பிரசாரத்தில் கலந்துகொள்ள 5,000 பேருக்கு மேல் அனுமதி இல்லை. இதில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
