பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தனது 16 வயது மகள் 12ம்வகுப்பு படித்து வருகிறார். தினமும் டியூஷன் செல்லும்போது கொடுங்கையூர் ஆர்.வி.நகர் 1வது தெருவை சேர்ந்த உமா சங்கர் (32) என்பவர் தொடர்ந்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.