மேலூர்: மேலூர் அருகே தூண்டில் போட்டு மீன்களை பிடிக்கும் வினோத திருவிழா நேற்று நடைபெற்றது. கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் கிராமங்களில் ‘ஊத்த கார்த்திகை’ என்னும் பெயரில் கோழி, ஆடு, மீன் போன்ற அசைவ உணவு தயாரித்து உண்பது வழக்கம். இதற்காக மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள ஓட்டகோவில்பட்டியில் ஆண்டு தோறும் ஒரு வினோத விழா தொடர்ந்து வருகிறது. இங்குள்ள ஊரணியில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களை ஒரு நாள் மட்டும் யார் வேண்டுமானலும் தூண்டில் மட்டும் பயன்படுத்தி பிடித்து சமைத்து சாப்பிடலாம்.மற்ற நாட்களில் அந்த ஊரணியில் யாரும் மீன் பிடிக்க அனுமதியில்லை.