சென்னை: கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வெள்ள பாதிப்புகள் சரி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் மக்களை நேரில் சந்தித்து, மீட்பு பணிகளை அதிவேகத்தில் முடுக்கிவிட்டுள்ளார். அவரது பணிகளை பல்வேறு துறையினர் பாராட்டி வருகின்றனர்.