பெங்களூரு: சரக்குகள் மூலம் சேமிக்கப்பட்ட வருமானம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தென்மேற்கு ரயில்வே வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு ரயில்வே சார்பில் இயங்கும் சரக்கு ரயில்களில் வெளிமாநிலங்களுக்கு, வெளிமாவட்டங்களுக்கு சரக்குகள் ஏற்றி, இறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதன்படி 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை 7 மாதங்கள் சரக்குகள் கையாண்டது மூலம் தென்மேற்கு ரயில்வேக்கு ரூ.337 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 24.56 சதவிகிதம் அதிகமாகும். கொரோனாவுக்கு பின் ரயில்களில் சரக்குகளை அனுப்புவது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 5 மாதங்களில் 3.54 மில்லியன் டன் சரக்குகள் ரயி கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.